முகமறியா மனங்களோடு வலைவெளியில் ஒரு சந்திப்பு......என்றும் அன்புடன் முத்து வாப்பா....

Monday, March 14, 2011

எங்கள் கூடு..



அடுக்குப் படுக்கையைக் கொண்ட
அடுக்கு மாடிக் கட்டிடங்களில்
வாழும் சிறுவண்டுகள்!
மூட்டைப் பூச்சியும்;
முகச் சுளிப்பும்;
வந்துப்போகும் எங்கள்
வசந்த மாளிகைக்கு!

படித்தவரும்;படிக்காதவரும்;
படுப்பதால்;
சமச்சீர் கொள்கைகள்
சாரல் வீசும்!
  
சமைப்பதும்;குளிப்பதும்;
அட்டவணையில் தொங்க;
ஊர்ச் சாமான்கள்
படுக்கைக்குக் கீழே
பதுங்கிக்கிடக்க;
காலணிகள் ஒரத்தில்
ஒதுங்கிக் கிடக்க;
கனமான இதயத்துடன்
கவனமாக உழைக்க
வந்தத் தேசத்தில்;
நாங்கள் ஓய்வெடுக்கும் இடம்!
-யாசர் அரஃபாத்

No comments:

Post a Comment