முகமறியா மனங்களோடு வலைவெளியில் ஒரு சந்திப்பு......என்றும் அன்புடன் முத்து வாப்பா....

Wednesday, June 8, 2011

ஒரு மொக்கை தொலைபேசி உரையாடல்

நண்பர்: ஹலோ முத்து  இருக்காரா?


முத்து: எங்க?

நண்பர்: அங்க...

முத்து: அங்க இருக்காரா இல்லையான்னு எனக்கு எப்படி தெரியும்...

நண்பர்: நீங்க யாரு பேசுறது?


முத்து: நீங்க யாரு என்று நினைத்து அழைத்தீர்கள்

நண்பர்: முத்து என்று நினைத்து தான்

முத்து: முத்து தான் பேசுறேன்

நண்பர்: மச்சிஎப்படிடா இருக்கே


முத்து: உயிரோட தான் இருக்கேன்

நண்பர்:சரி விடுஇப்ப என்ன பண்ணிட்டிருக்கே... 

முத்து: உன்கூட பேசிக் கொண்டு இருக்கேன்

நண்பர்: அப்புறம்?


முத்து: விழுப்புரம் காஞ்சிபுரம்

நண்பர்: சரி விடுஉன்னோட படிப்பு எல்லாம் எப்படி போகுது ?


முத்து: அது எங்கேயும் போகலநான் தான் அதைத் தேடி கல்லூரிக்கு போனேன்

நண்பர்: தேர்வு எப்போது ?


முத்து: முடிந்து விட்டது

நண்பர்: எப்படி மச்சி எழுதினே...

முத்து: கையால தான்

நண்பர்: டேய் ,


முத்து: இல்ல இது இரவுடே முடிஞ்சிடுச்சி

நண்பர்: சரி நான் அப்புறம் பண்ணுறேன்

முத்து: அப்புறம் பண்ணுறது இருக்கட்டும்இப்ப எதுக்கு பண்ணினே...

நண்பர்: நாயே நாயே அதைச்  சொல்ல விடாம தான் இப்படி அறுக்கிறியே...

முத்து: எத அறுக்குறேன்

நண்பர்: என்னால முடியலடாதலை சுத்துது

முத்து: அதுக்கு மருத்துவர்கிட்ட போடா நான் என்ன பண்ண முடியும்

நண்பர்: மச்சி,நான் போறேன் அதுக்கு முன்னாடி ஒன்னே ஒன்னு மட்டும் சொல்லுறேன்டா

முத்து: சொல்லுடா,

நண்பர்: எனக்கு ரொம்ப நாளா இருந்த டவுட் இப்ப தீர்ந்தது

முத்து: என்ன டவுட் மச்சி

நண்பர்: நீ அரை லூசா இல்ல முழு லூசா அப்படின்னு ஒரு டவுட் இருந்துச்சி இப்ப தெரிஞ்சு போச்சு நீ முழு லூசு தான் ....

முத்து: ??????

No comments:

Post a Comment