முகமறியா மனங்களோடு வலைவெளியில் ஒரு சந்திப்பு......என்றும் அன்புடன் முத்து வாப்பா....

Saturday, January 8, 2011

திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா...


திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா...
வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம்! ٌ

என் பசி மறந்து உனக்காககாத்திருக்கும்பொழுது
காத்திருக்கவேண்டாமென கண்டித்துவிட்டு..
ஒரு கையால் இரு இதழுக்கு ஊட்டுகிறாய்! ٌ

ٌ பள்ளிக்குசெல்லமறுத்து தூங்குவதாய்
நடிக்கும்சின்னப்பையனைபோல...
மடியில் படுத்துக்கொண்டு எழ மறுக்கிறாய்!

ٌ கை இழுத்துவைத்து குளிக்கவைக்க
முயலும்போது குளிரடிப்பதாய் கூறி -
ஒரு குழந்தையை போல அழுகிறாய் !

கெஞ்சுவதும்...மிஞ்சுவதும்...அழுவதும்...
அணைப்பதும்...கண்டிப்பதும்... கண்ணடிப்பதும்...
இடைகிள்ளி... நகைசொல்லி...
அந்நேரம் சொல்வாயடா "அடி கள்ளி "

ٌ இவையெல்லாம் இரண்டே மாதம்தந்துவிட்டு...
எனை தீ தள்ளி வாழ்வள்ளி என்றுசென்றுவிட்டாய்...
என் துபாய்கணவா!ٌகணவா...

எல்லாமே கனவா.......?
கணவனோடு இரண்டு மாதம்...
கனவுகளோடு இருபத்தி இரண்டுமாதமா...?

ٌ 12வருடமொருமுறை குறிஞ்சிப்பூ ...
5 வருடமொருமுறை ஒலிம்பிக்....
4 வருடமொருமுறை உலககோப்பை கிரிக்கெட்... ...
2 வருடமொருமுறை கணவன் ...
நீளும் பட்டியலோடு நீயும் இணைந்துகொண்டாய்!ٌ

இது வரமா ..? சாபமா..? அழகுக்காய் பிணத்தின் சாம்பலில்...
முகம் பூசுவோர் உண்டோ ?ٌ
கண்களின்அழுகையை... கண்ணாடி தடுக்குமா கணவா?
நான் தாகத்தில்நிற்கிறேன் - நீ கிணறு வெட்டுகிறாய்
திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா...
வாழ்வின் அர்த்தம்புரிந்துவாழலாம்

ٌ
விட்டுகொடுத்து... தொட்டு பிடித்து...
தேவை அறிந்து... சேவைபுரிந்து...
உனக்காய் நான் விழித்து... எனக்காக நீஉழைத்து...
தாமதத்தில்வரும் தவிப்பு... தூங்குவதாய் உன் நடிப்பு...
வாரவிடுமுறையில் பிரியாணி... காசில்லா நேரத்தில்பட்டினி...ٌ
இப்படி காமம்மட்டுமன்றி எல்லா உணர்ச்சிகளையும்
நாம்பரிமாறிக்கொள்ளவேண்டும்ٌ
இரண்டு மாதம்மட்டும்ஆடம்பரம் உறவு உல்லாச பயணம்.
.
பாசாங்கு வாழ்க்கை புளித்துவிட்டது கணவா!ٌ
தவணை முறையில் வாழ்வதற்கு வாழ்க்கை என்ன வட்டிக்கடையா?
எப்பொழுதாவது வருவதற்கு நீ என்ன பாலை மழையா ?
இல்லை ஓட்டு வாங்கிய அரசியல்வாதியா ?ٌ
விரைவுத்தபாலில் காசோலை வரும்காதல் வருமா?
பணத்தை தரும்... பாரத வங்கி ! பாசம் தருமா?ٌ

நீ இழுத்து செல்கின்றபெட்டியோடு
ஒட்டியிருக்கிறது என்இதயம்
அனுமதிக்கப்பட்ட எடையோடு
அதிகமாகிவிட்டதால் விமானநிலையத்திலேயே விட்டுவிட்டாயோ என் இதயத்தை?
பித்தளையை எனக்கு பரிசளித்துவிட்டு... நீதங்கம் தேடிதுபாய்சென்றாயே?ٌ
பாலையில் நீ, வறண்டது என் வாழ்வு!வாழ்க்கை பட்டமரமாய் போன...
பரிதாபம் புரியாமல் ஈச்சமரம்பக்கம் நின்றுஎடுத்த புகைப்படம் அனுப்புகிறாய்!
உன் துபாய் தேடுதலில்... தொலைந்து போனது -என்வாழ்க்கையல்லவா..?ٌ
விழித்துவிடு கணவா! விழித்து விடு - அந்த கடவுச்சீட்டுவேண்டாம்...
கிழித்துவிடு!விசாரித்துவிட்டு போகாதே கணவா விசா ரத்து செய்துவிட்டு வா!
திரும்பி வந்துவிடு என் துபாய்கணவா... வாழ்வின் அர்த்தம்புரிந்துவாழலாம்.

No comments:

Post a Comment